ஏரியில் மூழ்கி 3 பேர் பலி.. நிவாரணம் அறிவித்த முதல்வர்

by Staff / 22-10-2024 01:59:30pm
ஏரியில் மூழ்கி 3 பேர் பலி.. நிவாரணம் அறிவித்த முதல்வர்

மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வீரக்கல் கிராமம் கொத்திக் குட்டை ஏரியில் கடந்த 20ஆம் தேதி அன்று துணி துவைக்கச் சென்ற சிவநந்தினி, சிறுவன் சிவகிரி, திவ்யதர்ஷினி ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via