கட்சியில் இருந்து விலகுவதாக நாதக மாவட்ட செயலாளர் அறிவிப்பு

by Staff / 25-02-2025 12:26:15pm
கட்சியில் இருந்து விலகுவதாக நாதக மாவட்ட செயலாளர் அறிவிப்பு

நாதக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது ஆதரவாளர்கள் 100 பேரும் கட்சியில் இருந்து விலகியதாக தெரிவித்தார். "பெரியாரையும், தமிழ் தேசியத்தையும் எதிர் எதிராக நிறுத்துவது பேராபத்து. தமிழ் தேசிய அரசியல் வெல்லும் என்ற நோக்கில் சீமானுடன் கைகோர்த்தேன். ஆனால் அவரின் பேச்சு கொள்கைக்கு முரணாக மாறிவிட்டது” என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo