சேலம் பேரூராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் அடிதடி

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி கூட்டத்தில், திமுக கவுன்சிலர்கள் செந்தில், கலியவரதராஜ் ஆகியோர் தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்கிக்கொண்டனர். தங்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி கவுன்சிலர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவருக்கொருவர் மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்கிக்கொண்டதால் மற்ற கவன்சிலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Tags :