குஜராத்தின் கிர் தேசிய பூங்காவில் சபாரி சென்ற பிரதமர் மோடி..சிங்கங்களை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி

உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, இன்று காலை குஜராத் ஜூனகத் மாவட்டத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்திற்கு பிரதமர் மோடி சென்றார்..இதுகுறித்து எக்ஸ் தளத்தில், நமது கிரகத்தின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பாதுகாக்க ஒவ்வொரு இனமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “இன்று, உலக வனவிலங்கு தினத்தன்று, நமது கிரகத்தின் நம்பமுடியாத பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கு நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். ஒவ்வொரு உயிரினமும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. வரும் தலைமுறைகளுக்கு அவற்றின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்! வனவிலங்குகளைப் பாதுகாப்பதிலும் இந்தியாவின் பங்களிப்புகளில் நாங்கள் பெருமை கொள்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
Tags :