துணிகர திருட்டு; மூன்றுபேர் கைது

by Editor / 15-03-2025 12:12:14pm
துணிகர திருட்டு; மூன்றுபேர் கைது

கோவை சிங்காநல்லூரில் பூட்டிய வீட்டில் 13 சவரன் நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் திருடு போன வழக்கில், 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற நிலையில், வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டிருப்பதையும், வீட்டில் இருந்து இருவர் தப்பி ஓடியதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களில் ஒருவரை பிடித்த நிலையில் மற்ற இருவர் தப்பிச் சென்றனர். 

புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யேஷ் கிருஷ்ணா (எ) வசந்த், சுரேஷ், இசக்கி பாண்டியன் மற்றும் சூர்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 13 சவரன் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ. 35,000 பணம் ஆகியவை மீட்கப்பட்டன.கைது செய்யப்பட்ட சூர்யா மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகளும், சுரேஷ் மீது 2 திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

கைது செய்யப்பட்ட சுரேஷ் மற்றும் இசக்கி பாண்டியன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சூர்யா சிறுவர் என்பதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரை கோவை மாநகர காவல் ஆணையர் பாராட்டியுள்ளார்.

 

Tags :

Share via