விண்வெளியில் இருந்து பூமிக்கு புறப்பட்டார் சுனிதா.

by Editor / 18-03-2025 11:54:01am
விண்வெளியில் இருந்து பூமிக்கு புறப்பட்டார் சுனிதா.

சுனிதா வில்லியம்ஸ், புட்ஜ் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் பூமி திரும்புகின்றனர்,விண்கலம் தரையிறங்க 4 நிலைகளை கடக்க வேண்டும்; டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்தது.விண்வெளிக்கு பிரியாவிடை கொடுத்த சுனிதா வில்லியம்ஸ்.

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ஏறத்தாழ 17 மணி நேர பயணத்திற்குப் பின் இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் 9 மாதங்களை கழித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் குழு சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றது.

டிராகன் விண்கலத்தில் அமெரிக்கா, ரஷ்யாவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் அடங்கிய க்ரூவ்-10 குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதனையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் டிராகன் விண்கலத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்புகின்றனர். இந்திய நேரப்படி இன்று காலை 10.15 மணி அளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம்சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்தது.

 

Tags : விண்வெளியில் இருந்து பூமிக்கு புறப்பட்டார் சுனிதா.

Share via