பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் துவக்கம். 

by Editor / 05-04-2025 06:15:13pm
பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் துவக்கம். 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ஆம் தேதி நிறைவடைந்தது.  தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள், மே மாதம் 5-ந்தேதி வெளியாக உள்ளன.

பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்,பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி நேற்று  (ஏப்ரல் 4) முதன்மை தேர்வாளர்களுக்கு தொடங்கியது.இன்று துணைதேர்வாளர்கள் அந்தப்பணியினை தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ல் தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: விடைத்தாள் திருத்துதல் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து தற்போது திருத்துதல் முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன. விடைத்தாள் திருத்துதல் பணி இன்று தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 46 ஆயிரம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர். அதன் பின்னர் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. திருத்துதலின்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Tags : பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் துவக்கம். 

Share via