கன்னியாகுமரியில் வார விடுமுறை சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது -

சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு உள்ளூர் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணங்கள் வருவதால் சர்வதேச அந்தஸ்தை இந்த சுற்றுலா மையம் பெற்றுள்ளது சாதாரண காலங்களை விட விடுமுறை காலங்கள் பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரிக்கும் அந்த வகையில் இன்று வார விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்தும் கடலில் நீண்ட நேரம் குளித்தும் உற்சாகம் அடைந்தனர் . மேலும் சுற்றுலா படகுகளில் விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.பயணிகளின் வருகை அதிகரிப்பால் கன்னியாகுமரி இன்று களை கட்டி உள்ளது.
Tags : கன்னியாகுமரியில் வார விடுமுறை சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது -