ரயிலில் முதல்முறையாக ATM வசதி.. பயணிகள் மகிழ்ச்சி

by Editor / 16-04-2025 12:51:05pm
ரயிலில் முதல்முறையாக ATM வசதி.. பயணிகள் மகிழ்ச்சி

மத்திய ரயில்வே மும்பை-மன்மத் பஞ்சவதி எக்ஸ்பிரஸில் சோதனை அடிப்படையில் ஏடிஏம் இயந்திரத்தை நிறுவியுள்ளது. மகாராஷ்டிரா வங்கியால் வழங்கப்பட்ட இந்த ஏடிஎம், தினசரி விரைவு ரயிலின் ஏசி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்-ல் இருந்து விரைவில் பயணிகள் பணம் எடுக்கலாம். ரயில் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் உள்ள போதிலும், ஓடும் ரயிலில் ஏடிஎம் நிறுவப்பட்டது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் பயணிகள் தங்கள் நேரத்தை சேமிக்க முடியும். அவசர தேவைக்காக இனி ரயிலிலேயே பணம் எடுக்கலாம்.

 

Tags :

Share via