கணவனை கொன்று உடலை சூட்கேஸில் அடைத்த மனைவி

by Editor / 21-04-2025 05:11:06pm
கணவனை கொன்று உடலை சூட்கேஸில் அடைத்த மனைவி

உத்திர பிரதேசம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொலை செய்துள்ளார். நௌஷாத் அகமது (38) என்பவர் துபாயில் இருந்து 10 நாட்களுக்கு முன்னர்தான் வீடு திரும்பியுள்ளார். தனது மனைவி ரஸியா மற்றவருடன் தொடர்பில் இருப்பதை கண்டித்துள்ளார். இதனால் ரஸியா தனது காதலன், மருமகனுடன் இணைந்து கணவனை கொலை செய்துள்ளார். பின்னர் உடலை இரண்டு துண்டுளாக வெட்டி சூட்கேஸில் வைத்து ஊருக்கு வெளியே வீசியுள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via