தமிழகத்தில் 38 மருந்துகள் தரமற்றவை.. ஆய்வில் கண்டுபிடிப்பு

by Editor / 23-05-2025 12:37:01pm
தமிழகத்தில் 38 மருந்துகள் தரமற்றவை.. ஆய்வில் கண்டுபிடிப்பு

 

தமிழகத்தில் 38 மருந்துகள் உள்பட நாடு முழுவதும் 136 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது. அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via