குளத்தில் வாலிபர் சடலம் மீட்பு

கோவை உக்கடம் பெரியகுளத்தில் நேற்று ஆண் சடலம் மிதந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே கடை வீதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 45 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார், எந்த ஊர் என்பன போன்ற விவரம் தெரியவரவில்லை. அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பன போன்ற கோணங்களில் உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :