25 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா.

by Staff / 24-09-2025 11:12:51pm
25 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா.

திருநெல்வேலியில் முதன்முறையாக நாளை 25.09.2025 முதல்  ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்குகிறது .. இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா சவாரி தச்சநல்லூரில் நடைபெற உள்ளது கட்டணம் ஒரு நபருக்கு 25 கிலோமீட்டர் வரை பயணிக்க ரூபாய் 5999 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்கள் செப்டம்பர் 25 ,26, 27 ,28 வரை காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலா ஹெலிகாப்டர் சேவை இயங்கும். இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மக்களுக்கு புதிய. பொழுதுபோக்கு அனுபவத்தை அளிக்கும் என கூறப்படுகிறது. திருநெல்வேலி நகரின் அழகை வானில் இருந்து ரசிக்க ஒரு வாய்ப்பாகும் .

 

Tags : 25 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா.

Share via

More stories