ஈரான் தாக்குதலுக்கு காரணமானவர்களை தாக்காமல் அப்பாவி மக்களை கொண்ட தங்கள் நாட்டு மக்களை தாக்குவது தவறானது-ஐக்கிய அமீரகம் கடும் கண்டனம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய வான்வழி தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள வளைகுடா நாடுகளான துபாய், கத்தார் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளின் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இத்தகைய தாக்குதலுக்கு ஐக்கிய அமீரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் தனது அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா தளங்களை குறிவைத்து வளைகுடா நாடுகளில் இந்த தாக்குதலை நடத்துகிறது . ஈரான் தாக்குதலுக்கு காரணமானவர்களை தாக்காமல் அப்பாவி மக்களை கொண்ட தங்கள் நாட்டு மக்களை தாக்குவது தவறானது என்று அமீரகம் தெரிவித்துள்ளது சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பக்ரைன் ,கத்தார் ,ஜோர்டான் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகள் இந்த தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன.
Tags :



















