பிரச்சாரப் பயணங்கள் ஒரு புனித பயணம் மேற்கொண்டது போன்ற உணர்வைத் தந்து- பிரதமர் மோடி
மேற்கு வங்க சட்டசபை இரண்டாம் கட்ட பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தா மற்றும் பாரட்பூர் ஆகிய இடங்களில் ரோடு சோக்களை நடத்தினார். ஞாயிற்றுக்கிழமை வடக்கு கொல்கத்தாவில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி ரோடு நடத்தினார் பி. கே. பால்அவனிய முதல்கன்னா சந்திப்பு வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். திங்கட்கிழமை பிரச்சாரத்தின் கடைசி நாளில் பாரப்பூரில் நடைபெற்ற ரோடு சோவில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற காளி கோவிலுக்கு சென்று பிரதமர் வழிபாடு நடத்தினார். பிரதமரின் ரோடு சோவிற்கு பின்னர் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை ஆறு மணி உடன் நிறைவடைந்தது. இந்தப் பிரச்சாரப் பயணங்கள் ஒரு புனித பயணம் மேற்கொண்டது போன்ற உணர்வைத் தந்ததாக பிரதமர் மோடி சமூக வலைதள பக்கத்தில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
Tags :


















.jpg)
