கணவனின் கள்ளகாதல் - அதிர்ச்சியடைந்த மனைவி 14 வயதான மகளுடன் தூக்கிட்டு தற்கொலை

by Editor / 06-09-2021 10:02:11am
கணவனின் கள்ளகாதல் - அதிர்ச்சியடைந்த மனைவி 14 வயதான மகளுடன் தூக்கிட்டு தற்கொலை

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் அசோக் ராஜபாண்டி. இவர் மனைவி ராஜலட்சுமி. தம்பதிக்கு சிவதர்ஷினி என்ற 14 வயது மகள் இருந்தார்.

அசோக் ராஜபாண்டிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் செல்போனில் தொடர்ந்து அவருடன் பேசினார்.

இந்த உரையாடலை கேட்ட ராஜலட்சுமி கணவரின் தவறான செயலை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கணவரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்காரணமாக இருவருக்கும் இடையே வீட்டில் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. கணவன் - மனைவி இடையே கொஞ்ச நாள்களாக பேச்சுவார்த்தை இல்லை.

ராஜபாண்டி தன் மகளிடம் மட்டுமே பேசி வந்துள்ளார். இருப்பினும் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ராஜலட்சுமி தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் தூக்கில் தொங்கிய இருவரையும் மீட்டு அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுபற்றி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அசோக் ராஜபாண்டி இன்னொரு பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் நீண்டநேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த ராஜலட்சுமி, தனது மகள் சிவதர்ஷினியுடன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via