பிறைசூடன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மலரஞ்சலி

by Editor / 09-10-2021 03:11:50pm
பிறைசூடன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மலரஞ்சலி

மறைந்த கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மலரஞ்சலி செலுத்தினார் 
கவிஞர் பிறைசூடன் உடல்நலக்குறைவால்  சென்னையில் காலமானார்.கவிஞர் பிறைசூடன்  இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  நேரில் சென்று, பிறைசூடன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.எம். பிரபாகர ராஜா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.


கவிஞர் பிறைசூடன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
"நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என்  ஊர்க்காரர் - உடன்பிறப்பு" என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர்; திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கெனத் தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், இரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.என  இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தார்.

 

Tags :

Share via