40 தினங்களுக்குப்பின்னர் 18 நாகை மீனவர்கள் வீடு திரும்பினார்
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர் ; உறவினர்கள் கண்ணிர்மல்க வரவேற்பு.கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை அக்கரைப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 23 மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 23 மீனவர்களில் 40 தினங்களுக்குப்பின்னர்
விடுதலை செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 18 பேர் சொந்த கிராமம் வந்தடைந்தனர்.மீனவர்களை உறவினர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் அவர்களை கண்ணிர்மல்க வரவேற்றனர்.
Tags :