முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவுஏற்பட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். இன்று ஜெயலலிதாவின் 5வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து மரியாதை செலுத்தினார்கள்.மேலும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தனர். அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.
Tags :



















