நாகர்கோவில் அரசு பேரூந்தில் மீண்டும் ஒரு சம்பவம்.

by Editor / 09-12-2021 10:29:35pm
நாகர்கோவில் அரசு பேரூந்தில் மீண்டும் ஒரு சம்பவம்.

நாகர்கோவிலில் சமபத்தன்று அரசு பேருந்து டி.எண்-74 என்.1802என்ற எண்ணுள்ள பேருந்தில் கண்பார்வையற்ற முதியவர் ஒருவரும்,பெண் ஒருவரும்,குழந்தை ஓன்று பயணத்தை தொடங்கியுள்ளனர்.ஆனால் அந்த பேரூந்து நடத்துனர் பேரூந்தை நடுரோட்டில் நிறுத்தி அந்த பயணிகளை இறக்கி விட்டுள்ளார்.மேலும் அவர்களது படுக்கையை எடுத்து எறிந்துள்ளார்,அந்த சிறு குழந்தை அழுகுரல் கூட வீடியோவில் ஒலிக்கிறது. இந்த நாடோடி சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட விவகார வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவவே இது  குறித்து உடனடி  விசாரணைக்கு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோதங்கராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாகர்கோவில் அரசு பேரூந்தில் மீண்டும் ஒரு சம்பவம்.
 

Tags :

Share via