கொரானா வழிகாட்டுதல்களை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை - மதுரை மாநகராட்சி எச்சரிக்கை.
மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பொது இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் கொரானா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைளை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த 12 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, இன்று மட்டும் 165 வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு 26,400ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரானா தடுப்பு மற்றும் நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags :