மது போதையால் குடும்ப தகராறு; வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 19-03-2024 05:25:59pm
மது போதையால் குடும்ப தகராறு; வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வீரவள்ளி, அரிஜன தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் இளையராஜா வயது 37. இவரது மனைவி மாரியாயி வயது 30. அண்மைக்காலமாக இளையராஜா மது போதைக்கு அடிமையானார். பலமுறை அறிவுறுத்தியும் கேட்காமல் மது அருந்தியதால், கணவன் -மனைவி இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர்.இதனால், விரக்த்தியான மனநிலையில் வாழ்ந்து வந்த இளையராஜா, மார்ச் 17ஆம் தேதி இரவு 7: 35- மணி அளவில், வீரவள்ளியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் அறிந்த இளையராஜாவின் மனைவி மாரியாயி, இது குறித்து காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த இளையராஜாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் லாலாபேட்டை காவல் துறையினர்.

 

Tags :

Share via