ஆழ்துளை கிணற்றுக்குள்  விழுந்த 4 வயது சிறுவன் உயிருடன் மீட்பு 

by Editor / 07-05-2021 04:40:48pm
ஆழ்துளை கிணற்றுக்குள்  விழுந்த 4 வயது சிறுவன் உயிருடன் மீட்பு 



ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.
ஜலோர் மாவட்டம் லாச்சிரி கிராமத்தை சேர்ந்த நாகாராம் தேவசி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன் 90 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டுள்ளது. அதில் அவரது 4 வயது மகன் அனில் தேவசி தவறி விழுந்துவிட்டான். தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் துரிதமாக இறங்கினர்.
சிறுவன் மயக்கம் அடையாமல் இருக்க, குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. தொடர்ந்து 9 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். அச்சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via