வகுப்பறையில் மாணவர்களுக்கு வாரியல் அடி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருக்கும் மாணவர்களை துடப்பத்தால் தாக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் உள்ள மின்விசிறி மற்றும் சுவிட்ச்போட் ஆகியவற்றை அடித்து நொறுக்கியும்,இருக்கைகளை பதம்பார்த்தும் உள்ளனர். ஒவ்வொரு நாளும் இதுபோன்ற சம்பவம் இப்பள்ளியில் அரங்கேறி வருவதாக பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளி தரப்பில் தெரிவிக்கும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். பள்ளி மாணவர்கள் ஒன்றிணைத்து காலையில் வருகைப்பதிவு எடுத்தவுடன் பள்ளிக்கு வெளியே மதில் சுவர் எகிறி குதித்து அந்தபகுதிகளில் இருக்கும் முட்புதருக்குள் சென்று போதை பொருட்களை உபயோகப்படுத்துவதாகவும்,இதன் காரணமாகவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.
Tags :