திருச்செந்தூர் அருகே பால் பண்ணைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

by Staff / 23-04-2022 12:16:37pm
திருச்செந்தூர் அருகே பால் பண்ணைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பால் பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது ஆறுமுகநேரி சேர்ந்த பால குமரேசன் என்பவருக்கு சொந்தமான முத்துகிருஷ்ண புறத்திலுள்ள பால்பண்ணை கடந்த 20ஆம் தேதி நள்ளிரவில் தீ பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த மாடுகள் மாட்டு தீவனங்கள் வைக்கோல் ஆகியவை எவ்வித சேதாரமுமின்றி தப்பியது இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சி ஆய்வு செய்தபோது 2 மர்ம நபர்கள் பால்பண்ணை எதிரே உள்ள தோட்டத்தில் இருந்து சாலையை கடந்து வேகமாக ஓடிவந்து பால் பண்ணையில் ஓலையில் செட்டுக்கு கையிலிருந்த பொருளை தூக்கி வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதற்கிடையில் ஆறுமுகநேரியில் கஞ்சா போன்ற போதைப் பழக்கத்தில் ஈடுபடுவர்கள் வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பால குமரேசன் பங்கேற்றார் இதனால் ஆத்திரமடைந்த  காஞ்ச கும்பல் பால் பண்ணையை தீ வைத்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via