கோத்தகிரி அருகே வீடு ஒன்றில் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை

by Staff / 28-04-2022 02:03:35pm
கோத்தகிரி அருகே வீடு ஒன்றில் புகுந்து   நாயை  கவ்விச் சென்ற சிறுத்தை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வீடு ஒன்றில் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்விச் சென்ற காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. புதூர் பகுதியில் அமைந்துள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டுக்குள் இரவில் புகுந்த சிறுத்தை அங்கு காருக்கு அருகே குறித்தபடி நின்று கொண்டிருந்த வளர்ப்பு நாயைபாய்ந்து கவ்வி தூக்கிச் சென்றது முருகன் அளித்த தகவலின் பேரில் அப்பகுதிக்குச் சென்று வனத்துறையினர் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via