100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுர வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் நேற்று மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலக்தை பார்வையிட்டு அதனுடையபணிகளைத் துரிதபடுத்தி இந்தாண்டு இறுதிக்குள் தென்தமிழகத்தின் மிகப்பிரமாண்ட நூலகத்தை திறந்திட வேண்டி அறிவுறுத்தினார்.பின்னர் கடந்த கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டுத் திறக்கப்படாமலும் சரியானபராமரிப்பின்றியும் இருந்த நூறு சமத்துவபுர வீடுகளை சீர்படுத்தி பயனாளர்களிடம் ஒப்படைக்கும் விழாவில் கலந்து கொள்ள இன்று சிவகங்கை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோட்டை வேங்கைப்பட்டியில் ரூ. 3.17 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவுசமத்துவபுரத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார்.
Tags :