ரெயில் முன்பாய்ந்து தற்கொலைக்கு  முயன்றவரை  காப்பாற்றிய காவலர்

by Editor / 29-05-2021 08:05:25pm
ரெயில் முன்பாய்ந்து தற்கொலைக்கு  முயன்றவரை  காப்பாற்றிய காவலர்


மும்பை தாதர் ரெயில் நிலையத்தில், ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காவலர் ஒருவர் தடுத்து மீட்டுள்ளார்.
மராட்டிய மாநிலம் மும்பை தாதர் ரயில் நிலையத்தில், புறநகர் ரெயிலுக்காக மக்கள் அனைவரும் காத்திருந்த சமயத்தில், நடைமேடையில் சாதாரணமாக சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் ரெயில் வரும் சமயம் பார்த்து திடீரென தண்டவாளத்தை நோக்கி குதித்துள்ளார். அவரது அருகிலேயே வந்து கொண்டிருந்த காவலர் இதனை கண்டதும் உடனடியாக தண்டவாளத்தில் குதித்து அந்தப் பெண்ணை தண்டவாளத்தின் மறுபக்கம் இழுத்து காப்பாற்றியுள்ளார்.
தற்கொலை செய்ய முயற்சித்த அந்த பெண் ஏதோ ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
இருப்பினும் ரெயில் வரும் சமயம் பார்த்து பெண் திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், நொடிப்பொழுதில் காவலர் அந்த பெண்ணை காப்பாற்றிய சம்பவம் அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via
Logo