சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை

by Editor / 21-08-2022 09:19:28pm
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை

சென்னை,அரியலூர்,தஞ்சை,புதுக்கோட்டை, முழுவதும் தீவிர இடியுடன் கூடிய மழை பெய்து கரையை நோக்கி நகரும்.கே.கே.நகரில் சில மேக வெடிப்பு வகை மழை பெய்து 1 மணி நேரத்தில் 93.4மிமீ மழை பதிவாகியுள்ளது.சென்ட்ரல், அடையாறு, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, கோடம்பாக்கத்தில் கனமழை,தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், முடிச்சூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை,கனமழையால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு - பொதுமக்கள் அவதி.சென்னையில் பெய்துவரும் கனமழை இரவு 10 மணி வரை தொடரலாம். 10 மணிக்கு பிறகு மழை படிப்படியாக குறையும்.எனவே வெளியே இருப்பவர்கள் கூடுமான வரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும். - தனியார் வானிலை ஆய்வு மையம்

 

Tags :

Share via