பிளாஸ்டிக் பையில் பெண் சடலம்.

by Staff / 25-10-2022 02:46:45pm
பிளாஸ்டிக் பையில் பெண் சடலம்.

மகாராஷ்டிராவை சேர்ந்த தம்பதியர், கேரள மாநிலம் கொச்சி கடவன்தரா பகுதியில் பணிபுரிந்து வந்தனர். அவர்களது வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து சென்ற போலீசார், மூடப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கருப்பு நிற பிளாஸ்டிக் பையில், அந்த வீட்டில் தங்கியிருந்த பெண் கொலை செய்யப்பட்டு, சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது.இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னரே இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் தெரியவந்துள்ளது. விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் லட்சுமி (30) என தெரியவந்துள்ளது. தலைமைறைவான அப்பெண்ணின் கணவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

 

Tags :

Share via