காதலியை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொன்ற காதலன்
உத்தர பிரதேச மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், அதை மறைத்து இன்னொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமான சேதி அப்பெண்ணுக்கு தெரிய வர கவுரவை விட்டு விலகிச் சென்றுள்ளார் அப்பெண். இந்தநிலையில் கவுரவ் அப்பெண்ணை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.அவர் வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவுரவ் அந்த பெண்ணை 3 வது மாடியிலிருந்து தள்ளி விட்டு கொலை செய்துள்ளார். கொலை செய்து விட்டு தப்பி ஓட முயன்ற போது, அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
Tags :