விஷ சாராயத்தால் 21 பேர் பலி:சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

by Editor / 15-12-2022 11:32:56pm
விஷ சாராயத்தால் 21 பேர் பலி:சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

பீகாரில் 2016ஆம் ஆண்டிலிருந்து பூரண மதுவிலக்கு கொள்கை அமலில் உள்ளது. நேற்று அம்மாநிலத்தில் விஷ சாரயம் குடித்து 21 பேர் பலியாகினர். இந்நிலையில் விஷ சாராய விற்பனையை அரசு தடுக்கத் தவறிவிட்டதாக கூறி பா.ஜ.க.எம்எல்ஏக்கள் பீகார் சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர். பதிலுக்கு முதல்வர் நிதீஷ்குமார், எதிர்கட்சிதான் கள்ளச்சாராயம் விற்கிறது என்றார். இதனால் இரண்டு கட்சியினருக்கும் மோதல் ஏற்படவே சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.


 

விஷ சாராயத்தால் 21 பேர் பலி:சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
 

Tags :

Share via