வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்திரபாத்திற்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த நிலையில், வந்தே பாரத் ரயிலின் மீது மர்ம நபர்கள் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். சோதனை ஓட்டத்தின்போது நடந்த இந்த தாக்குதலில் 2 கண்ணாடி ஜன்னல்கள் சேதம் அடைந்துள்ளது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :