மகளிர் கல்லுரி பேருந்து மீது லாரி மோதி விபத்து மாணவிகள் 16 பேர் காயம்

by Staff / 21-02-2023 04:12:47pm
மகளிர் கல்லுரி பேருந்து மீது லாரி மோதி விபத்து மாணவிகள் 16 பேர் காயம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் இயங்கி வரும் செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி.  இக்கல்லூரி பேருந்து இன்று காலை காவாரப்பட்டிலிருந்து மாணவிகளை அழைத்துகொண்டு தஞ்சை சாலையில் மன்னார்குடி வந்து கொண்டிருந்தபோது தஞ்சாவூரிலில் இருந்து செம்மண் ஏற்றிவந்த லாரி காளவாய்கரை என்ற இடத்தில் கல்லூரி பேருந்தின் பின் பக்கம் மோதி விபத்தை ஏற்படுத்தியதால் பேருந்துதில் சென்றுகொண்டிருந்து 16 மாணவிகள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, 14 பேர் சிகிச்சை பெற்று சென்ற நிலையில் இரண்டு மாணவிகள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுகுறித்து மன்னார்குடி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags :

Share via