சாலையோரம் ஆண் பிணம்

by Staff / 13-03-2023 02:03:05pm
 சாலையோரம் ஆண் பிணம்

வடமதுரை அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோப்பம்பட்டி பிரிவு அருகே நேற்று சாலையோரம் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வடமதுரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர், அப்பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்தித்திரிந்தது தெரியவந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்ைல. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via