மண்டபம் கடலில் பதுக்கிய 250 கிலோ கடல் அட்டை பறிமுதல்.
தமிழக கடல் மார்க்கமாக போதை பொருட்கள் கடத்தலை தடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு படி, ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் மரைன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மண்டபம் மரைன் எஸ்ஐ யாசர் மவுலானா தலைமையில் போலீசார் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இன்று ரோந்து சென்றனர். அப்போது, மண்டபம் முகாம் முனைக்காடு பகுதியில் கடலுக்கு அடியில் சாக்கு மூடைகள் கயிறால் கட்டப்பபட்டிருந்ததை பார்த்தனர்.சந்தேகத்தின் பேரில் சாக்கு மூடைகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் 9 மூடைகளில் 250 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டை இருந்தன. இது தொடர்பாக கடல் அட்டைகளை பதுக்கி வைத்த கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 250 கிலோ கடல் அட்டையின் மதிப்பு ரூ 60 ஆயிரம் இருக்கும் என மரைன் போலீசார் தெரிவித்தனர்.
Tags :