ரயில் விபத்து - கனடா பிரதமர் இரங்கல்

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்துக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த ரயில் விபத்து குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், இந்தியாவின் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து குறித்த படங்களும் தகவல்களும் என் இதயத்தை நொறுக்குகின்றன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த கடினமான சூழலில், இந்திய மக்களுடன் கனடா நாட்டு மக்கள் துணை நிற்கின்றனர் என பதிவிட்டுள்ளார்.
Tags :