மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள  முதலமைச்சர் அழைப்பு .

by Admin / 23-07-2023 07:00:14pm
மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள  முதலமைச்சர்  அழைப்பு .

மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்அழைப்பு விடுத்துள்ளார்..

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் திறந்து வருகிறது. தமிழ்நாடு அரசு எடுத்து வரும் விளையாட்டு மேம்பாட்டு முன்னெடுப்பு திட்டங்களால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருகின்றனர்.

.விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும் வேதனையுடன் பார்க்கிறது .  மணிப்பூர்எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது. கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை அடுத்த ஆண்டு 2024 நடத்துவதற்கான மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியிடை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன யாதும் ஊரே யாவரும் கேளிர் எல்லா ஊரும் எனது ஊர் எல்லா மக்களும் எனது உறவினர் என்று நினைத்து அன்பே வாழ்வின் அடிப்படை ஆதாரம் என்று வாழ்ந்தால் இந்த வாழ்வு மிகவும் இனிமையானதாக திகழும் என்றகணியன்பூங்குன்றனாாின் புறநானூற்று வரிகள் தான் தமிழர் பண்பாட்டின் அடையாளமும் அடித்தளமும் ஆகும். அந்த வகையில் தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளையாட்டு கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால் அம் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பயிற்சிகள் பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை நான் கேட்டுக் கொண்டுள்ளேன். இவ் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் உயர்தர பயிற்சிகள் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என மாண்புமி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உறுதி அளித்துள்ளார்

.மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள அவர்களின் விவரங்களை அதாவது தங்கள் பெயர் முகவரி அடையாளம் சான்று தொடர்பு விவரங்கள் விளையாட்டு சாதனைகள் மற்றும் பயிற்சி தேவைகள் போன்ற விவரங்களுடன் மின்னஞ்சல் முகவரியில் மற்றும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக முதலமைச்சர் முடித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்..

 

மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள  முதலமைச்சர்  அழைப்பு .
 

Tags :

Share via