ஆத்தூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

by Staff / 09-08-2023 05:41:22pm
ஆத்தூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் செல்வபிரகாஷ். ரிக் வண்டி தொழிலாளி. இவருடைய மனைவி ஆனந்தி (வயது 29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த ஆனந்தி கடந்த 27-ந் தேதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி ஆனந்தி இறந்தார். இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via