தமிழகத்தில்  28-ம் தேதி அதிமுக  கவன ஈர்ப்பு போராட்டம்

by Editor / 23-07-2021 04:36:40pm
தமிழகத்தில்  28-ம் தேதி அதிமுக  கவன ஈர்ப்பு போராட்டம்

திமுக அரசை கண்டித்து தமிழகத்தில்  28-ம் தேதி அதிமுக  கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துகிறது.

 

இதுகுறித்து .பி.எஸ் மற்றும் .பி.எஸ் கூட்டாக சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு சட்டமன்றப்பொதுத்தேர்தல்பிரச்சாரத்தின்போது தி.மு.. தலைவர்மு.. ஸ்டாலினும்‌, அவருடைய மகன்உதயநிதி ஸ்டாலினும்‌, மு.. ஸ்டாலினின்தங்கை கனிமொழியும்‌, மாமன்மகன்தயாநிதியும்‌, தமிழ்நாட்டில்தி.மு.. ஆட்சி அமைந்தவுடன்‌ "நீட்‌" தேர்வு ரத்து செய்யப்படும்என்று ஊரெங்கும்பிரச்சாரம்செய்தார்கள்

இப்போது "நீட்" தேர்வுக்கு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, "நீட்‌" தேர்வுக்கு தயாராகும்படி மாணவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றால்பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து, வருமானம்சுருங்கிப்போய்அல்லல்படும்மக்களின்துயரத்தைப்போக்க தி.மு.. அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்‌. தங்களுடைய ஆட்சி அமைந்தவுடன்பெட்ரோல்விலையை ரூ. 5/-ம்‌, டீசல்விலையை ரூ. 4/-ம்குறைப்பதாகவும்‌, சமையல்எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100/- மானியம்தருவதாகவும்வாக்களித்த தி.மு.. இதுவரை தனது வாக்குறுதியைப்பற்றி வாய்திறக்காமல்இருக்கிறது. தமிழ்நாடெங்கும்பலமுறை மின்வெட்டு நாள்தோறும்நடைபெறுகிறது

மேலும் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் விவகாரத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திமுக அரசின் மெத்தனப் போக்கை களையவும்.. அக்கறையுடன் மக்கள் குரலுக்கு செவிசாய்க்க வருகின்ற 2ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் தங்கள் வீடுகளின் முன் பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாய் ஒலிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் .பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

 

Tags :

Share via