மணல் திருடிய இருவா் கைது: 2 டிராக்டா்கள் பறிமுதல்
வளவனூா் அருகே ஓடையில் மணல் திருடியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மேலும், அவா்களிடமிருந்த 2 டிராக்டா்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வளவனூரை அடுத்த வி. புதூா் பம்மை ஆறு ஓடையில் மணல் திருடப்பட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வளவனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தங்கபாண்டியன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, விழுப்புரம் வட்டம், வி. புதூா் பம்பரக்குட்டையைச் சோந்த ம. குமரன் (39), வி. புதூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோந்த இளவழுதி மகன் அஜித் (27) ஆகியோா் டிராக்டா்களில் மணல் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா். மேலும், மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய 2 டிராக்டா்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Tags :