4 பேர் படுகொலை - உடலை வாங்க ஒப்புதல்

by Staff / 04-09-2023 05:04:20pm
4 பேர் படுகொலை - உடலை வாங்க ஒப்புதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிண்று கிராமத்தில் நேற்று வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்டபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த செந்தில்குமார், மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாளா ஆகிய 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பல்லடம் அருகே நடைபெற்ற படுகொலையில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் சம்மதித்துள்ளனர். பிரேத பரிசோதனை நிறைவு பெற்ற நிலையில் வாக்குவாதத்திற்கு பிறகு உடலை வாங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மர்மநபர்களால் கொல்லப்பட்ட 4 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via