எஸ்பிஜி தலைவர் காலமானார்
சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் (SPG) இயக்குநர் அருண் குமார் சின்ஹா (61) ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்றூ காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சின்ஹா 1987 பேட்ச் கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். சமீபத்தில், அவருக்கு சேவை நீட்டிப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG) இந்தியப் பிரதமர் மற்றும் அவரது நேரடி குடும்ப உறுப்பினர்கள் உலகில் எங்கிருந்தாலும், அவர்களை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான 1988-இல் அமைக்கப்பட்ட பாதுகாப்புப் படை ஆகும்
Tags :