செங்கல்பட்டு மருத்துவமனையில் சிறுமிக்கு கரு கலைப்பு
செங்கல்பட்டு: வண்டலுார் ஓட்டேரியில் 17 வயது சிறுமிக்கு, கடந்த தினம் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. அவரின் பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஏழு மாத கர்ப்பமாக இருப்பதாகவும், வயிற்றில் குழந்தை இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். அங்கு, ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, கருக்கலைப்பு செய்து, வயிற்றில் இறந்த நிலையில் இருந்த குழந்தை அகற்றப்பட்டது. தொடர்ந்து, சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக கூடுவாஞ்சேரி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Tags :