காஞ்சிகோவில் வாலிபர் கழுத்து அறுபட்டு சடலமாக மீட்பு.
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிகோயில் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (33). இவர் ஈரோடு பகுதியில் உள்ள ஒரு வேஷ்டி தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், கீழ் காலனி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். அதே சமயம் கொலை செய்யப்பட்டும் இருக்கலாம், என்ற கோணத்தில் சந்தேக மரணம் என போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :