காய்ச்சலால் 8ஆம் வகுப்பு மாணவி பலி

by Staff / 07-11-2023 11:41:41am
காய்ச்சலால் 8ஆம் வகுப்பு மாணவி பலி

தமிழகத்தில் சமீபகாலமாக டெங்கு, மர்ம காய்ச்சலால் சிறுவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது மருத்துவத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், காரைக்குடியை சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி மேகலாவுக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்தது. அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, ரத்த பரிசோதனை எடுக்காமல் எந்த வகையான காய்ச்சல் என்றும் சொல்லாமல் ஊசி போட்டு அனுப்பி உள்ளனர். காய்ச்சல் தீவிரமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேகலா நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காய்ச்சலுக்கு பள்ளி மாணவி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories