ஆளுநரை சட்டமன்றத்தில் விமர்சிக்க மாட்டோம் - அப்பாவு

by Staff / 16-11-2023 02:50:14pm
ஆளுநரை சட்டமன்றத்தில் விமர்சிக்க மாட்டோம் - அப்பாவு

ஆளுநர் திருப்பியனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக வரும் சனிக்கிழமை தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர், குடியரசுத் தலைவர், நீதிமன்றங்கள் ஆகியவற்றை விமர்சிக்க மாட்டோம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவதே சிறப்புக் கூட்டத்தொடரின் நோக்கம். மசோதாக்கள் திருத்தம் செய்யாமல், மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்றும் அப்பாவு கூறியுள்ளார்.

 

Tags :

Share via