அரசு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

by Staff / 18-11-2023 03:08:58pm
அரசு பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

ஈரோடு ரெயில் நிலையத்திலிருந்து ஈரோடு பஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலை அரசு டவுன் பஸ் சென்று கொண்டு இருந்தது. காளைமாட்டு சிலை நிறுத்தம் அருகே பஸ் வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென பஸ் முன் பாய்ந்தார். இதில் பஸ்சின் முன் சக்கரம் அந்த வாலிபர் மீது ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து பஸ்சுக்காக நின்று கொண்டு இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூரம்பட்டி போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த வாலிபருக்கு 30 வயது இருக்கும். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு வாலிபர் பஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via