தெலங்கானாவில் 119 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.

by Editor / 30-11-2023 09:19:13am
தெலங்கானாவில் 119 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.

தெலங்கானாவில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்காக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அம்மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவப்படையினர், 50 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. வரும் டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். ஆளும் கட்சியான பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவும் அம்மாநிலத்தில் 3வது முறையாக முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆட்சியை தக்க வைப்பாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Tags : தெலங்கானாவில் 119 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.

Share via