காலை 10 மணிக்குள் இடி, மின்னலுடன் கூடிய கனமழை

by Editor / 30-11-2023 09:20:56am
 காலை 10 மணிக்குள் இடி, மின்னலுடன் கூடிய கனமழை

வடஇலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (வியாழக்கிழமை)
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் காலை 10 மணிக்குள் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.

 

Tags : காலை 10 மணிக்குள் இடி, மின்னலுடன் கூடிய கனமழை

Share via